December 30, 2009

உன்னைப் பற்றி
எழுதியே
கவிதையாகி விடுகிறது
என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும்
******

என் முதல் கவியை
நினைக்கும்போதெல்லாம்
நான் மறப்பதில்லை
உன் முதல் முத்ததை
******

என்னை கிறுக்கனாக்கிக்
கொண்டிருக்கிறது உன்னை
பார்த்த என் கவிதைகள்
******

நீ மிக
அழகானவள்
என்பதற்கு
உன் மேல்
பொறாமைப்படும்
என் கிறுக்கல்
ஒன்று போதாதா
******

எனக்கான உன்னை
எப்படியாவது
மிஞ்ச வேண்டும் என்பதே
என் கவியின் தவம்
-யாழ்_அகத்தியன் 
Leave a Comment » |
எனக்கான கவி நீ *2* |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நவம்பர் 19, 2009
எனக்குத் தெரியாத
தமிழ்மீதான என் கோபம்
இன்னும் குறையவில்லை
ஏனெனில்
எப்பொழுதெல்லாம்
அதை தெரிந்த
கொள்ள் நினைக்கிறேனோ
அப்பொழுதெல்லாம்
தனி அறைகளில்
சில
கவியரசுகளிடம் மட்டும்
மனம்விட்டு
பேசிக் கொண்டிருக்கும்
தமிழே நீயும்
வசதியானவர்களின்
வர்க்கம்தான்
அதனால்தான்
என்னைப் போண்ற
ஏழைக் கிறுக்கன்களை
உன் கண்களுக்கு
தெரிவதே இல்லை
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
தமிழுக்கு நான் ஏழை... |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நவம்பர் 9, 2009
எனக்கான கவி நீ *1*

இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ
******

யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று
என்னவள் கண்
பட்டதால்தானே
வாழ்கிறது
என் கவிதைகள்
******

உன் மூக்குத்தி மின்னுவதில்
தெரிகிறது வானவில்லின்
அழகு
******

உன் பாதச்சுவடெங்கும்
தேங்கிய மழை நீரில்
உன் முகம்
காட்டுகிறது நிலா
******

வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்
******

உன் வருடலுக்காய்
ஏங்குகிறது
என் நரைமுடிகள்
-யாழ்_அகத்தியன் 
1 மறுமொழி |
எனக்கான கவி நீ *1* |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நவம்பர் 1, 2009
என் பாடல்….{08}

காதல் மலரே காதல் மலரே
என் கவியின் முதல் வரியே
எங்கே பூத்தாய் நினைவிருக்கா
என் கண்கள் இரண்டில் கவியாய் பூத்தாய்
என் நெஞ்சம் எங்கும் நிலாவாய் வளர்ந்தாய்
எந்தன் உலகத்தை உன்னால் நிரப்பினாய்
உன்னைக் கொண்டே என்னை வரைந்தாய்
உந்தன் வாழ்வில் என்னை இணைத்து
கோடி சுகம் காணவைத்தாய்
அன்பே ஆருயிரே என் ஆசையில் வளர்ந்த
கனவே உன் கையில் என்ன காந்தமா உன் கை
பிடித்தால் ஒளிமயமகுதே இதில் என்ன மாயம்
கண்ணே
உன் கண்ணில் எந்தன் விம்பம் தெரியுதே
அப்படியே நீ உறங்கிவிடு இறந்து போவேனே
இன்பமாய் உன்னில் நானே
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
என் பாடல்……[08] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 28, 2009
கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
*
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
*
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
என் நீயும் என் கவியும் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
செப்டம்பர் 1, 2009
இல்லாத கடவுளை
நம்பாத எனக்கு
இருக்கின்ற
காதல் தந்த
வரம் நீ
*
தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்
என் ஒவ்வொரு
துணிவிலும் நீ
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
காதல் தந்த வரம் நீ |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஆகஸ்ட் 23, 2009
தாமரை நீ
தண்ணீர் நான்
நீ வாழ
வற்றாமல் நான்
*
என்னைச்
சுற்றிக் கரை
உன்னைச்
சுற்றி நான்
இருந்தும்
எனதில்லை
தாமைரையாய் நீ
*
தாமரை
இலையாய் நீ
ஒட்ட மாட்டாய்
என்று தெரிந்தும்
தண்ணீர்த்
துளியாய் நான்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
தண்ணீரில் தாமரை |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஜூன் 23, 2009
ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
ஈழம் கனவுதான் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நவம்பர் 26, 2008
http://yaalakathiyan.page.tl/

உன் கரம்
பிடித்தற்காய்
எத்தனை
ஊர்கள்
என்னை
ஒதுக்கி
வைத்தாலும்
என்றும்
நீயே
என் உலகம்
*
என்னை
ஒதுக்கி வைக்க
ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை
உன் பிரிவு
ஒன்றே போதும்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
துணையானவளே...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.