எனக்கான கவி நீ *1*

நவம்பர் 9, 2009

இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ

 

-யாழ்_அகத்தியன்


என் பாடல்……[08]

நவம்பர் 1, 2009

காதல் மலரே காதல் மலரே
என் கவியின் முதல் வரியே
எங்கே பூத்தாய் நினைவிருக்கா

என் கண்கள் இரண்டில் கவியாய் பூத்தாய்
என் நெஞ்சம் எங்கும் நிலாவாய் வளர்ந்தாய்
எந்தன் உலகத்தை உன்னால் நிரப்பினாய்
உன்னைக் கொண்டே என்னை வரைந்தாய்
உந்தன் வாழ்வில் என்னை இணைத்து
கோடி சுகம் காணவைத்தாய்

அன்பே ஆருயிரே என் ஆசையில் வளர்ந்த
கனவே உன் கையில் என்ன காந்தமா உன் கை
பிடித்தால் ஒளிமயமகுதே இதில் என்ன மாயம்
கண்ணே

உன் கண்ணில் எந்தன் விம்பம் தெரியுதே
அப்படியே நீ உறங்கிவிடு இறந்து போவேனே
இன்பமாய் உன்னில் நானே

-யாழ்_அகத்தியன்

 


என் நீயும் என் கவியும்

அக்டோபர் 28, 2009

கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்

கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்

*

என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை

*

என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது

-யாழ்_அகத்தியன்

 


காதல் தந்த வரம் நீ

செப்டம்பர் 1, 2009

இல்லாத கடவுளை
நம்பாத எனக்கு
இருக்கின்ற
காதல் தந்த
வரம் நீ

*

தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்

என் ஒவ்வொரு
துணிவிலும் நீ

-யாழ்_அகத்தியன்


தண்ணீரில் தாமரை

ஆகஸ்ட் 23, 2009

தாமரை நீ
தண்ணீர் நான்

நீ வாழ
வற்றாமல் நான்

*

என்னைச்
சுற்றிக் கரை
உன்னைச்
சுற்றி நான்

இருந்தும்
எனதில்லை

தாமைரையாய் நீ

*

தாமரை
இலையாய் நீ

ஒட்ட மாட்டாய்
என்று தெரிந்தும்

தண்ணீர்த்
துளியாய் நான்

 

-யாழ்_அகத்தியன்


ஈழம் கனவுதான்

ஜூன் 23, 2009

ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது

ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்

உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்

எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது

-யாழ்_அகத்தியன்


எனது புதிய வலைப்பூ

டிசம்பர் 4, 2008

http://yaalakathiyan.page.tl/

எனது புதிய வலைப்பூவுக்கு

உங்களை அன்போடு அழைக்கிறேன்

வாருங்கள் வாருங்கள் வந்து உங்கள்
கருத்துக்களை தாருங்கள் அன்புடன்

http://yaalakathiyan.page.tl/

-யாழ்_அகத்தியன்


துணையானவளே…!

நவம்பர் 26, 2008

 

 

http://yaalakathiyan.page.tl/

 

 

உன் கரம்
பிடித்தற்காய்

எத்தனை
ஊர்கள்

என்னை
ஒதுக்கி
வைத்தாலும்

என்றும்

நீயே
என் உலகம்

*

என்னை
ஒதுக்கி வைக்க

ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை

உன் பிரிவு
ஒன்றே போதும்

-யாழ்_அகத்தியன்


இனிதானவளே…!

செப்டம்பர் 8, 2008

 

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்

*

நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்

அதுவல்ல
என் ஆசை

என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்


உயர்வானவளே…!

மார்ச் 20, 2008

 

 

 

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

*

 என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ

உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்

*

கவிதை என்று
யார் கேட்டாலும்

உன் பெயர்
சொல்வேன்

உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்

நான் எழுதாத
காவியம்
என்பேன்

*

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்

நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்

*

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்

எழுதிக்
கொண்டேயிருந்தேன்

உன்னை விட
எழுத நினைத்தேன்

எழுதுவதையே
மறந்துவிட்டேன்

 

-யாழ்_அகத்தியன்