மார்ச் 20, 2008

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்
*
என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ
உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்
*
கவிதை என்று
யார் கேட்டாலும்
உன் பெயர்
சொல்வேன்
உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்
நான் எழுதாத
காவியம்
என்பேன்
*
என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்
*
உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
உயர்வானவளே...! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
மார்ச் 18, 2008

ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்
உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்
*
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா
பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்
நீ
தூக்கவே
முடியாதளவுக்கு
*
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்
தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு
*
ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது
*
எல்லாம் சேலைதான்
எனினும்
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது
*
என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட
நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்
-யாழ்_அகத்தியன்
3 மறுமொழிகள் |
அன்னையே தெய்வம்...[02] |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
மார்ச் 17, 2008

தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன
என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்
*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு
*
என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்
*
எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
உன் எல்லா
குழந்தைக்கும்
ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே
*
என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை
*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்
உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்
*
நான்
பார்த்திருக்கிறேன்
உன் கண்
வலிக்காக அழாமல்
என் மேல்
விழுந்த தூசிக்காய்
நீ கண்ணீர்
சிந்தியதை
*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்
இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
அன்னையே தெய்வம்...! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
மார்ச் 13, 2008
எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை
*
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை
*
அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது
*
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள்
என்றாலும் அவளால்
வாசிக்கப்படும்
கவிஞன் நான்
*
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
இலக்கியமானவளே...! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
மார்ச் 11, 2008

என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்
*
உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்
*
நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு
*
ஆயிரம்
கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்
உன் பெயர் எழுதி
கவிஞனானேன்
*
உனக்கான கவிதை என்று
தெரிந்தும்
எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
வரமானவளே...! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
மார்ச் 3, 2008
உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்
*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு
*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்
அந்தத்தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்
*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது
எனக்கான கவிதை நீ என்பதின்
பெருமை எனக்குரியது
*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ
நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும் விழியாய் நான்
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
மனமானவளே..! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
ஜனவரி 11, 2008

தன்னை விதைத்து
காதலை
எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்
காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும்
என் மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்
*
நீ என்னை மட்டும்
உன்
வசப்படுத்தவில்லை
என் கவி
வாசகர்களையும்தான்
பார்
கவி எழுதிய என்னை
விசாரிக்காமல்
எல்லாரும்
யாருக்காக எழுதியது என்று
உன்னை விசாரிப்பதை
*
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு
*
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
*
என்றும் உன் அருகே
நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம்
கிடைக்காமல் போனாலும்
உன் கால்தடங்கள் தேடியே
ஓடிவரப்போகும் உன்
குழந்தையாகும் வரம்கொடு
அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
இயல்பானவளே..! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
ஜனவரி 10, 2008

நான் - உறக்கம்
நீ - கனவு
உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்
*
என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு
என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு
*
என் சொந்தங்களில் நான் தான்
முதல் கவிவாசகன் என்பதில் சிறிய
கவலை எனக்கு
இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே
*
உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்
உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு
*
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை
என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
மொழியானவளே..! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
ஜனவரி 8, 2008

காதலனே
எனக்கு எதுவும்
வாங்கிவராதே
முடிந்தால் உன்னை
யார்
கண்ணும் படாமால்
கூட்டிவா
அதுவே போதும் நான்
கவலையின்றி கண்
உறங்க
*
உனக்காக
பிறந்தவள் நான்
என்றதில்
குழந்தையாய் நான்
மகிழ்ந்ததை விட
உன் கவிதையின் கரு
நான் என்பதிலேயே
தாயாய் நான்
அதிகமாய் மகிழ்ந்தேன்
*
பாவம் என் கன்னங்கள்
நீ ஆசையாய் கொடுக்கும்
ஒவ்வொரு முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க
தெரியாமல்
தடவி பறிக்கும் என் கை
விரல்களிடம் கொடுத்து
ஏமாந்துவிடுகிறது
*
இப்படி என் வீட்டவர
பயப்பிடுவாய் என்று
தெரிந்திருந்தால்
உன் புகைபடத்தை
என் அறையெங்கும் ஒட்டி
வைத்து
என் கோழைத்தனத்தை
வெளியே
அனுப்பியிருக்க மாட்டேன்
*
வெக்கம் கேட்ட
கவிஞன் நீ
என் வெக்கங்களை
கவிதையாக்கியே
என்னை வெக்கப்பட
மட்டும்
வைத்துவிட்டாய்
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
மன்னவனே..! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
ஜனவரி 5, 2008

என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்
உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்
*
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது
உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர
*
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்
ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது
*
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக
*
என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்
உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
உனக்கே உயிரானேன்...! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்