இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ
-யாழ்_அகத்தியன்
இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ
-யாழ்_அகத்தியன்
காதல் மலரே காதல் மலரே
என் கவியின் முதல் வரியே
எங்கே பூத்தாய் நினைவிருக்கா
என் கண்கள் இரண்டில் கவியாய் பூத்தாய்
என் நெஞ்சம் எங்கும் நிலாவாய் வளர்ந்தாய்
எந்தன் உலகத்தை உன்னால் நிரப்பினாய்
உன்னைக் கொண்டே என்னை வரைந்தாய்
உந்தன் வாழ்வில் என்னை இணைத்து
கோடி சுகம் காணவைத்தாய்
அன்பே ஆருயிரே என் ஆசையில் வளர்ந்த
கனவே உன் கையில் என்ன காந்தமா உன் கை
பிடித்தால் ஒளிமயமகுதே இதில் என்ன மாயம்
கண்ணே
உன் கண்ணில் எந்தன் விம்பம் தெரியுதே
அப்படியே நீ உறங்கிவிடு இறந்து போவேனே
இன்பமாய் உன்னில் நானே
-யாழ்_அகத்தியன்
கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
*
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
*
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
-யாழ்_அகத்தியன்
இல்லாத கடவுளை
நம்பாத எனக்கு
இருக்கின்ற
காதல் தந்த
வரம் நீ
*
தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்
என் ஒவ்வொரு
துணிவிலும் நீ
-யாழ்_அகத்தியன்
தாமரை நீ
தண்ணீர் நான்
நீ வாழ
வற்றாமல் நான்
*
என்னைச்
சுற்றிக் கரை
உன்னைச்
சுற்றி நான்
இருந்தும்
எனதில்லை
தாமைரையாய் நீ
*
தாமரை
இலையாய் நீ
ஒட்ட மாட்டாய்
என்று தெரிந்தும்
தண்ணீர்த்
துளியாய் நான்
-யாழ்_அகத்தியன்
ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது
-யாழ்_அகத்தியன்
எனது புதிய வலைப்பூவுக்கு
உங்களை அன்போடு அழைக்கிறேன்
வாருங்கள் வாருங்கள் வந்து உங்கள்
கருத்துக்களை தாருங்கள் அன்புடன்
-யாழ்_அகத்தியன்

உன் கரம்
பிடித்தற்காய்
எத்தனை
ஊர்கள்
என்னை
ஒதுக்கி
வைத்தாலும்
என்றும்
நீயே
என் உலகம்
*
என்னை
ஒதுக்கி வைக்க
ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை
உன் பிரிவு
ஒன்றே போதும்
-யாழ்_அகத்தியன்

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்
*
நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்
அதுவல்ல
என் ஆசை
என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்
*
என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ
உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்
*
கவிதை என்று
யார் கேட்டாலும்
உன் பெயர்
சொல்வேன்
உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்
நான் எழுதாத
காவியம்
என்பேன்
*
என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்
*
உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்
-யாழ்_அகத்தியன்