01 http://www.youtube.com/watch?v=dI1P9f4J870
02 http://www.youtube.com/watch?v=64L42MOOBOk&feature=related
03 http://www.youtube.com/watch?v=dP_67Rzjo_o
04 http://www.youtube.com/watch?v=oXOKyXlsah4&feature=related
01 http://www.youtube.com/watch?v=dI1P9f4J870
02 http://www.youtube.com/watch?v=64L42MOOBOk&feature=related
03 http://www.youtube.com/watch?v=dP_67Rzjo_o
04 http://www.youtube.com/watch?v=oXOKyXlsah4&feature=related
உங்களை அன்போடு வரவேற்கிறேன் என் புதிய வலைத்தளத்துக்கு
எனது முகப்புத்தகத்தை பார்க்க
http://www.facebook.com/yaalakaththiyan
எனது முகப்புத்தக பக்கத்தில் இணைய
http://www.facebook.com/yaazakaththiyan
காதலில்
விழுந்திடாதே
உன் வீட்டில்
எல்லோரும்
தலை முழுக
வேண்டிவரும்
*
உன் விடுதலை
அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்
நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது
*
வைத்தியர்
தேவையில்லை
உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்
*
நான் காதலையே
வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்
என்
பிணத்தை
நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது
என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது
அது கவிதை
*
ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.
உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறது
அழகான
கவிதை
கிறுக்கலானது
உன்
கையொப்பம்
கவிதையானதால்.
காகிதத்தாள்
என் மகன் கையில்
கிடைத்தால்
அவன் கிறுக்குகிறான்
அது அழகான
சித்திரமாகிவிடுகிறது
அத்தனையும்
பொக்கிசமாக்கப்படுகிறுது
என்னவளால்
என் பங்கிற்கு
நானும் கிறுக்குகிறேன்
அது இதுவரை
சித்திரமானதுமில்லை
கவிதையானதுமில்லை
கிறுக்கலாவதால்
என் கையாலே
கசக்கி எறியப்படுகிறது
-யாழ்_அகத்தியன்
தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை
————————-
காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை
————————
நீ
நல்லவளே இல்லை
பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்
———————–
உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது
தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று
-யாழ்_அகத்தியன்
// <![CDATA[//
அன்று
உனக்காக எழுதிய
கவியெல்லாம்
இன்று
கிறுக்கலாய் தெரிகிறது
ஆனாலும்
இன்னும் நான்
எழுதாக் கவி நீ
-யாழ்_அகத்தியன்
கும்பாபிசேக மேளச்சத்திலும்
அமைதியாய் இருக்கும்
சாமி போல
அடக்கம் உனக்கு
எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை
*
அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்
எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு
*
பொறுக்கவே
முடியவில்லை
என் மறதிகளை
நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்
அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்
*
பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்
*
வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்
வெக்கத்தையே ஆடையாய்
கட்டியிப்பவள் நீ
-யாழ்_அகத்தியன்
நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்
நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்
*
இறைவனிடம் வரம்
கேட்டேன்
அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து
தானே என்
மனைவியானான்
*
எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்
நான் உன்னைத் தேடி
வருவேன்
*
என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது
என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்
கவிதையானது
என் வாழ்க்கை
-யாழ்_அகத்தியன்