எனது வரிகளில் காதல் பாடல்கள்

அக்டோபர் 11, 2011

01     http://www.youtube.com/watch?v=dI1P9f4J870

 

02     http://www.youtube.com/watch?v=64L42MOOBOk&feature=related

 

03     http://www.youtube.com/watch?v=dP_67Rzjo_o

 

04    http://www.youtube.com/watch?v=oXOKyXlsah4&feature=related

 


வாசகர்களுக்கு

ஜூலை 12, 2011

உங்களை அன்போடு வரவேற்கிறேன் என் புதிய வலைத்தளத்துக்கு

http://yaalakathiyan.page.tl/

எனது முகப்புத்தகத்தை பார்க்க

http://www.facebook.com/yaalakaththiyan

எனது முகப்புத்தக பக்கத்தில் இணைய

http://www.facebook.com/yaazakaththiyan


கற்றது காதலை…!

December 26, 2010

சேற்றில்
விழுந்தாலும்

காதலில்
விழுந்திடாதே

உன் வீட்டில்
எல்லோரும்

தலை முழுக
வேண்டிவரும்

*

 

நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட

உன் விடுதலை
அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்

நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது

*

 

உன் காதல்
குழந்தையை
கலைக்க

வைத்தியர்
தேவையில்லை

உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்

*

 

காதல் திரைப்படமா
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்

நான் காதலையே
வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்

-யாழ்_அகத்தியன்


காதல் கண்ணீர்

December 26, 2010

நீ
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்

என்னை
கொண்றிருந்தால்

என்
பிணத்தை

நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது

*

என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது

-யாழ்_அகத்தியன்


காதல் கவி நீ…*2*

December 5, 2010

பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால் 

அது கவிதை

கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.

*

குழந்தையும்
உன் அழகும்
ஒன்றுதான் 

ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.

*

எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான் 

உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறது

*

நீ
எழுதிய 

அழகான
கவிதை

கிறுக்கலானது

உன்
கையொப்பம்
கவிதையானதால்.

-யாழ்_அகத்தியன்


காகிதத்தாள்

செப்டம்பர் 9, 2010

காகிதத்தாள்

என் மகன் கையில்
கிடைத்தால்
அவன் கிறுக்குகிறான்
அது அழகான
சித்திரமாகிவிடுகிறது

அத்தனையும்
பொக்கிசமாக்கப்படுகிறுது
என்னவளால்

என் பங்கிற்கு
நானும் கிறுக்குகிறேன்

அது இதுவரை
சித்திரமானதுமில்லை
கவிதையானதுமில்லை

கிறுக்கலாவதால்
என் கையாலே
கசக்கி எறியப்படுகிறது

-யாழ்_அகத்தியன்


காதல் கவி நீ…!

செப்டம்பர் 7, 2010
எனக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ

தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை

————————-

காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை

————————

நீ
நல்லவளே இல்லை

பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்

———————–

உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது

தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று

-யாழ்_அகத்தியன்

// <![CDATA[//


கவி நீ…!

ஆகஸ்ட் 18, 2010

அன்று

உனக்காக எழுதிய

கவியெல்லாம்

இன்று

கிறுக்கலாய் தெரிகிறது

ஆனாலும்

இன்னும் நான்

எழுதாக் கவி நீ

-யாழ்_அகத்தியன்


விசித்திரமானவளே…

ஜூலை 29, 2010

கும்பாபிசேக மேளச்சத்திலும்
அமைதியாய் இருக்கும்
சாமி போல
அடக்கம் உனக்கு

எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை

*

அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்

எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு

*
பொறுக்கவே
முடியவில்லை

என் மறதிகளை

நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்

அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்

*

பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்

*

வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்

வெக்கத்தையே ஆடையாய்
கட்டியிப்பவள் நீ

-யாழ்_அகத்தியன்


அன்புள்ள அம்மாச்சி….!

ஜூலை 11, 2010

நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்

நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்

*

இறைவனிடம் வரம்
கேட்டேன்

அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து

தானே என்
மனைவியானான்

*

எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்

நான் உன்னைத் தேடி
வருவேன்

*

என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது

என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்

கவிதையானது
என் வாழ்க்கை

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.