என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்.
*
எனது கல்லை எப்போதும்
இரண்டு விடயங்களை
நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்
*
இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்.
*
நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.
*
நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது பெறுமதி
வாய்ந்ததாக இருக்குமானால்.
*
என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.
*
நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை
*
என்னிடம் இருப்பதே அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை.
*
என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது.
*
இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.
*
ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.
*
பிரைச்சனைகள் என்னை குளப்பும்
போதுதான் நான் குளம்பாமல்
இருப்பேன்
*
சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும் பெரிய
வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்
*
நான் தெய்வம் இருக்கு என்பதை
நம்புகிறேன் அனால் மததின்
மூடனம்பிக்கையை பின்பற்றுவதில்லை.
*
என் விரல்கள் உள்ளவரை மோதிரங்கள்
தொலைந்ததற்காய் கவலைப்படமாட்டேன்.
*
உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவமே
*
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று
பொய்சொல்லக் காரணமே என் வருங்கால
மனைவிக்கே நான் காதலித்த பெருமையும்
சேர வேண்டும் என்பதால்தான்
*
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
*
அழகை பார்த்தே முதல்
காதல் வருகிறது
அழகிடம் தோற்றுப்போயே
உண்மைக் காதல் வருகிறது
*
கட்டாயத்தில் வருவதல்ல காதல்
கட்டாயங்களை மீறி வருவதே காதல்
*
என்னை விட என்னைக்
காதலிப்பவளைத்தான்
கல்யாணம் செய்ய
விரும்புகிறேன்
ஆனால் அதற்கு
அவளைவிட அவள் காதல் மேல்
எனக்கு நம்பிக்கை வர வேண்டும்
*
இரண்டு பேரால் கல்லாக பிறக்கிறோம்
பல பேரால் சிலையாக இறக்கிறோம்
*
எதிர்க்கும் சக்தி இல்லாதவன்
ஆசைப்படாமல் இருப்பதே சிறந்தது
*
யாரைக் காதலிக்கிறாயோ
அவளை ஆழமாய் காதல் செய் அதுவே
அவள் பிரிந்து சென்றால் அவளுக்கான
மிகப் பெரிய தண்டனை
*
உனது முடிவு என்பது
முடிவெடுத்தபின் உன்னை
கவலைப்பட வைக்காததா
இருக்க வேண்டும்
*
கல் காயப்படுக் கூடாது என்றால்
சிலை செதுக்கமுடியாது
*
கடவுள் இருக்கிறார இல்லையா என்று
சந்தேகப்பட்டு வாழ்வதைவிட
கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது.
*
என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்
*
வாழும்வரை
நிழல் தருவேன்
இறந்தால்
என் காதல்
துணைவியே
என்னை
விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்
-யாழ்_அகத்தியன்
6:51 மு.பகல் இல் செப்டம்பர் 17, 2008 |
hai friend very super……..GOD BLESS YOU…..TAKE CARE
8:38 பிற்பகல் இல் நவம்பர் 7, 2008 |
“ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.”
வணக்கம் அகத்தியன் கடன்கட்ட வேண்டிவந்தால் ?
சும்மா ஒரு கேள்வி.
வாழ்த்துக்கள்.
- சாந்தி -
8:03 மு.பகல் இல் டிசம்பர் 4, 2008 |
வணக்கம்..அகத்தியன்..
முதன்முதல்..உங்களை..சந்திக்கிறேன்..அனைத்தும்..மிக..அருமை..கண்டிப்பாக.உங்கள்..தத்துவங்கள்..இவ்வுலகில்..தங்கும்…உங்களைத்தாங்கும்
2:12 பிற்பகல் இல் மே 4, 2009 |
super
8:33 மு.பகல் இல் அக்டோபர் 5, 2009 |
hi anna can u send me your email address
6:57 மு.பகல் இல் அக்டோபர் 7, 2009 |
yaalakaththiyan@hotmail.co.uk