இப்படிக்கு நான்…!

 

என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்.

*

எனது கல்லை எப்போதும்
 இரண்டு விடயங்களை
 நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்

*

இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்.

*

 நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.

*

 நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது பெறுமதி
வாய்ந்ததாக இருக்குமானால்.

*

என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.

*

 நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை

*

என்னிடம் இருப்பதே அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை.

*

என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
 நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
 நடக்க உதவி செய்கிறது.

*

இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.

*

ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.

*

பிரைச்சனைகள் என்னை குளப்பும்
போதுதான் நான் குளம்பாமல்
இருப்பேன்

*

சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும் பெரிய
வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்

*

 நான் தெய்வம் இருக்கு என்பதை
 நம்புகிறேன் அனால் மததின்
மூடனம்பிக்கையை பின்பற்றுவதில்லை.

*

என் விரல்கள் உள்ளவரை மோதிரங்கள்
தொலைந்ததற்காய் கவலைப்படமாட்டேன்.

*

உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவமே

*

  நான் யாரையும் காதலிக்கவில்லை என்று
பொய்சொல்லக் காரணமே என் வருங்கால
மனைவிக்கே நான் காதலித்த பெருமையும்
சேர வேண்டும் என்பதால்தான்

*

தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்

*

 அழகை பார்த்தே முதல்
 காதல் வருகிறது
அழகிடம் தோற்றுப்போயே
உண்மைக் காதல் வருகிறது

*

கட்டாயத்தில் வருவதல்ல காதல்
கட்டாயங்களை மீறி வருவதே காதல்

*

என்னை விட என்னைக்
காதலிப்பவளைத்தான்
கல்யாணம் செய்ய
விரும்புகிறேன்

ஆனால் அதற்கு
அவளைவிட அவள் காதல் மேல்
எனக்கு நம்பிக்கை வர வேண்டும்

*

 இரண்டு பேரால் கல்லாக பிறக்கிறோம்
பல பேரால் சிலையாக இறக்கிறோம்

*

எதிர்க்கும் சக்தி இல்லாதவன்
ஆசைப்படாமல் இருப்பதே சிறந்தது

*

யாரைக் காதலிக்கிறாயோ
அவளை ஆழமாய் காதல் செய் அதுவே
அவள் பிரிந்து சென்றால் அவளுக்கான
மிகப் பெரிய தண்டனை

*

 உனது முடிவு என்பது
முடிவெடுத்தபின் உன்னை
கவலைப்பட வைக்காததா
இருக்க வேண்டும்

*

கல் காயப்படுக் கூடாது என்றால்
சிலை செதுக்கமுடியாது

*

கடவுள் இருக்கிறார இல்லையா என்று
சந்தேகப்பட்டு வாழ்வதைவிட

கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது.

*

 என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை  நம்பவில்லை

எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்

 *

வாழும்வரை
 நிழல் தருவேன்

இறந்தால்
என் காதல்
துணைவியே

என்னை
விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்

 

-யாழ்_அகத்தியன்

6 பதில்கள் “இப்படிக்கு நான்…!” க்கு;

  1. christopher சொல்வதென்னவென்றால்:

    hai friend very super……..GOD BLESS YOU…..TAKE CARE

  2. சாந்தி சொல்வதென்னவென்றால்:

    “ஆசைபட்டால் கடன்பட்டாவது
    அனுபவிப்பேன்.”

    வணக்கம் அகத்தியன் கடன்கட்ட வேண்டிவந்தால் ?

    சும்மா ஒரு கேள்வி.

    வாழ்த்துக்கள்.

    - சாந்தி -

  3. uumm சொல்வதென்னவென்றால்:

    வணக்கம்..அகத்தியன்..
    முதன்முதல்..உங்களை..சந்திக்கிறேன்..அனைத்தும்..மிக..அருமை..கண்டிப்பாக.உங்கள்..தத்துவங்கள்..இவ்வுலகில்..தங்கும்…உங்களைத்தாங்கும்

  4. thiru சொல்வதென்னவென்றால்:

    super

  5. amallan சொல்வதென்னவென்றால்:

    hi anna can u send me your email address

  6. யாழ்_அகத்தியன் சொல்வதென்னவென்றால்:

    yaalakaththiyan@hotmail.co.uk

மறுமொழி இடுக