சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டியபின்னும்
தூறும் துளிகள் எனக்கு
*
உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன்
கவிஞனாய்
*
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது
கவிதைகள் மட்டும் என்னை
*
நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய்
நீ சிரிக்காத போதும் சிரிக்க
*
உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்
*
உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது. 
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
என்னை அழகாய் ஏற்றிவிட்டாள்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.