அக்டோபர் 31, 2007

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம் உன்னைக்
காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன
அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்
*
உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ
*
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாது
பாடு படுவதுதான் என்னை
ரசிக்க வைக்கிறது
*
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்
*
நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகயழகு
அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
அசத்தலானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 30, 2007

எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்
அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்
*
என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது
*
நீ
ஆசைபட்டபொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்
*
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்
*
பூ
செடியை
சுற்றுமா என்ன..?
நீ
துளசிச் செடியை
சுற்றும்போது
என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
அன்பானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 28, 2007

இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்
நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்
*
பேசாமல் நான் சிவப்பு நிறத்தில்
பிறந்திருக்கலாம் இப்படி நீ முத்தம்
கொடுத்த (கடித்த) இடத்தை கஸ்ரப்பட்டு
மறைக்காமல் இருந்திருப்பேன்
*
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்
எப்படி…
உன்னிடம் முத்தம்
பெறவேண்டும் என்பதற்காய்
என்னை நானே கிள்ளிவிட்டு
நீ கிள்ளியதாய் பொய் சொல்கிறேனே
*
என்னைக் காதலிக்க எங்கும்
போகாதே உன் நிழலிடமே
கற்றுக்கொள்
நீ
பார்க்காமல் போனபோதெல்லாம்
என்னை தடவிச்சென்றது அதுதானே
*
நீ
தாமதமாய் வருபதைக்கூட
என்னால் திட்ட முடிவதில்லை
திட்டினால் அவசரமாய்
போய்விடுவாயோ என்று
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
அழகானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 26, 2007

நான் நானாகவே
இருந்திருக்கலாம்
நீ நீயாகவே
இருந்திருக்கலாம்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்
நீ என்னை
காதலோடு
பார்க்காமல்
போயிருந்தால்
நான்
உன்னிடம்
நேரம் கேக்காமல்
போயிருந்தால்
இப்பிடி சேர்ந்து
ஒன்றுக்குள் ஒன்றாக
வாழ்ந்துவிட்டு
ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
யார் குற்றமோ...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 26, 2007

ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்க மறந்து போன
காதல் நம்முடையது
அழகிய கவிதையே
என் பேனாவின் மையே
உன்னைக் கிறுக்கியே நான்
இறந்து கொண்டிருக்கிறேன்
தினம் ஏக்கத்தில்
விழித்திருப்பேன்
பாதையெங்கும் உன் விம்பம்
தேடி
எங்கே நீயென தேடித் தேடியே
நித்தம் முத்ததில் நானிருப்பேன்
உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே
எத்தனை இரவை என் விழி
பகலாக்கியிருக்கும் எல்லாம்
அன்பே நிலா உன்னை காணத்தானே
என்று புரிவாய் எனை என
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா…..
காதலி எனைக் காதலி
உன் கரம் பிடிக்க கை
நீளுதே
இதமான தென்றலை என்றும்
வீசுவேன் என்னருகே நீயிருந்தால்
உன் மடியில் நான் தூங்க
எங்கே நீ சென்றாலும் உன்னோடு
ஓடிவரும் நிழலாக நானிருப்பேன்
என்பதை நம்பிவிடு
ஆயிரம் சொன்னாலும் உலகம்
அன்பே உனை சேர அகிலமே
எதிர்த்தாலும் கோழையாய் நான்
முலையில் படுத்துறங்கமாட்டேன்
போராடியே போராளியாய்
உன் கை பிடிப்பேன் என்
உலகமே நீயாக வேண்டும்
என்பதே என் கொள்கை
எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை வேண்டாம்
எனக்காய் நீயும் ஓடி வரவேண்டாம்
விழுப்புண் அடைந்தாலும் வேங்கை நான்
உன்னைக் கேக்க வாசல் வருவேன்
அதுவரை பொறுத்திரு முடிந்தவரை
சமாதானமாய் பேசிப்பார்ப்போம்
சிறந்த வீரனுக்கு அழகு பொறுமையாம்
அழகு தேவதையே உன்னால் வீரனானேன்
உனக்கென பொறுக்க மாட்டேனோ
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
அன்பே ஆருயிரே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 24, 2007

நிலவு பிடிக்குமா என்கிறாய்
நீ காணாமல் போனால் உன்னை
கண்டுபிடிக்க நிலவைத்தானே நான்
அடையாளாமாய் வைத்திருக்கிறேன்
*
எல்லா பூக்களும் எப்படியோ
வாடிவிடுகிறது உன் புன்னகை
பூ மட்டும்தான் வாடமலிருக்க
பூக்கிறது
*
குடிச்சாவது பழகியிருக்கலாம் நான்
முத்தம் தராவிட்டால் குடிச்சிடுவேன்
என்று சொல்லியே கெஞ்சாமல் விரும்பியளவு
உன் முத்தங்களால் குளித்திருப்பேன்
*
என்னை இதயம் இயக்கவில்லை
என் இதழ்கள்தான் இயக்குகிறது
பார் முத்தம் கொடுக்க உன்
உச்சி முதல் பாதம்வரை மாறி மாறி
என்னை இயக்கிக் கொண்டிருக்கிறதே
*
என்னை கவிஞனாக்கியது
மட்டுமல்ல கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்
*
எதற்காக நீ
பூச் செடி வளக்கிறாய்
உன்னைப் போல் நடமாடும்
பூவாக பூக்கவே முடியாது
என்று ஆடிக்காட்டவா
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
மலரானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 24, 2007

எப்போதும் குளிரும் உன்
நினைவுகளில் நடு நடுங்கித்தான்
போர்த்துக் கொள்கிறேன் என்னைத்
தினமும் நான்
பாய் விரித்தும் உறங்க முடியாமல்
எனை சுருட்டிக்கொண்டிருக்கிறது
பிரிந்துபோன உனை இமைக்காது
தேடும் என் கண்கள்
நீண்டுகொண்டே போகும் இரவுகளில்
வளரும் நிலவோடு வளர்ந்துகொண்டே
போகும் உன் நினைவுகளை வழி
நடத்துகிறது இந்த பழைய மனசு
காயங்கள் பல கண்டபோதும்
நீ தூங்க புல்லாங்குழலானேன்
வலிதாங்கியே பழகிய என்னை
சுமைதாங்கியாக்கி அழகாய்
ஏறியமர்ந்தாய்
உன்னைச் சுமந்தே
உலகம் சுற்றிவந்தேன்
சுமக்கும் கழுதையாய் நான்
ஓரு நாள் ஏனோ உனை
இறக்கிவிடச் சொன்னாய்
பதறிப்போய் நான்
உன் வீட்டுவாசல் என்பதை
கவனிக்காது பத்திரமாய்
ஏற்றிய அதே கவனத்தோடு
கசங்காமல் இறக்கிவிட்டேன்
இதோ வாறேன் என
உன் வாசல் நுழைந்தாய்
இன்றுவரை நான் உனக்காய்
சிலையானதுதான் மிச்சம்
என்னை பட்டமாக்கி பறக்க
விட்ட காதல் தேவதையே
என்னை நானகவே
விட்டிருக்கலாம் நீ
கசக்கி எறிந்த கவிதையாய்
குப்பை தொட்டியில் கிடந்திருந்தாலும்
இப்பிடி நூலறுந்த பட்டமாய் உன்னிலே
நான் சிக்கிக் கிடப்பதைவிட அது மேல்
சரிவிடு
இனி எப்போதும் என்னைத் தேடி
வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது
இருந்தாலும்
உன் காதல் வார்த்தைகளால்
என் உயிரை எடுத்துப் போனாயே
அதையாவது
யாரிடமாவது கொடுத்தனுப்பு
சிலையாகிப்போன நான்
இறந்து போக வேண்டும்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
எங்கே என் உயிர்..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 23, 2007

நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை தந்துகொண்டே
இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை
படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய்
என்ற நம்பிக்கையில்
*
தினமும் நீ என்னை பார்த்தும்
பாராமல் போகிறாய் அதையும்
பார்ப்பம் பாரமல் பார்க்காம
எத்தனை மட்டும் பார்க்கப்
போறாயென்று
*
சொன்னா கேக்க மாட்டிங்களா
என்றதை கேக்கிறதற்காகவே
தினமும் மழையில் நனைந்து
வரலாம்
*
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ
*
நான் தொடர்ந்தும் உனக்காகவே
கவிதை எழுத வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசை உனக்கு
என் கவிதையை படித்துவிட்டு
யாரு எழுதிய கிறுக்கலுக்கு
வாழ்த்துகிறாயே
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
உன்னதமானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 23, 2007

நீ வரும்வரை என்னை எவரும்
கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது உன்னோடு கூட
வரலாம் நான்
*
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது
*
தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை தடவித்
தடவித்தான் என்னையே
நான் தூங்க வைக்கிறேன்
*
உன்னை நிற்க வைத்து யார்
புகைப்படம் எடுத்தது அதை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது
*
நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய் நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
தாயுமானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
அக்டோபர் 22, 2007

நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்
அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்
எழுத்துக்களை மிச்சம்பிடித்து
நீ எழுதியனுப்பிய கடிதங்கள்
ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்
உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்
இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
நான் அழித்துவிட்டு
வீரனாய் பெருமை
கொண்டபோதும்
இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
இதயத்தில் நீ..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.