டிசம்பர் 29, 2007

கோவமான
உன் முகத்தை
பார்பதற்காகவே
என் ஆசைகள்
உனக்கு பிடிக்காத
செயல்களை தெரிந்து
வைத்திருக்கிறது
*
வாய்காரன் நான்
என்பதை தெரிந்தா
என்னில் உனக்கு
அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்
அன்றில் இருந்து நான்
யாரிடமும் வாய்
காட்டுவதே இல்லை
*
உன்னை சந்திக்க
கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்
கவனமாய் உன்னை
தேடிக் கொண்டிருக்கும்
என் மனசு
*
எல்லா
எழுத்துக்களையும்
வைத்து
கவிதை எழுதினாலும்
இன்னும் என்னால்
உனக்கு
பெயர்வைத்ததால்
கவிஞனான உன்
தந்தைபோல்
இரண்டு எழுத்தில்
அழகான கவிதை
எழுத முடியவில்லை
*
நாடு கிடைக்க
போராடுபவன்
போராளி என்றால்
நீ கிடைக்க
போரடும் நான்
காதலாளிதான்
*
என்னை எழுதவைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
உண்மையானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 21, 2007
வானத்தில் நீந்திக்
கொண்டிருக்கிறது நிலா
நடுங்கியபடியே
ரசித்துக் கொண்டிருக்கிறாய் நீ *
நீ இல்லாத
பகல்கூட நிலவில்லாத
இரவுதான் எனக்கு
*
நிலாவை ரசிக்க வாசல் வந்தேன்
எனக்கு முன்னே வளர்பிறையாய் நீ
தேயத் தொடங்கினேன் நான்
எதை ரசிப்பது என்ற குளப்பத்தில்
*
நீ நிலாவை ரசிக்காமல்
தூங்கமாட்டாய்
என்பதில் பெருமை நிலாவுக்கு
நீ ரசித்த நிலாவை
வழியனுப்பும்வரை நான்
தூங்குவதில்லை என்பதில்
பெருமை எனக்கு
*
உனக்கு முன்னே
சிலர் குறுக்கே
போய்க்கொண்டிருந்தார்கள்
என்ன செய்வது நிலாவை
மறைக்கும் சொற்ப நேரத்தில்
சுகம் காணும் முகில்கள் அவர்கள்
*
இமைக்காது நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாய்
முகில்களிடம் கைகள் வாங்கி
முகம் மறைத்து வெக்கப்படுகிறது நிலா
*
நடக்கும் தூரத்தில்
நிலா இல்லை எனக்கு
ஆனாலும்
உன் கால்தடத்தில்
தேய்பிறையாய் நிலாவை
காண்கிறேன் நான்
*
அமாவாசை இரவிலும்
பெளர்ணமி நிலவாய்
என்றும் நீ எனக்கு
-யாழ்_அகத்தியன்
1 மறுமொழி |
நீயே நிலா.. நிலாவே நீ! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 20, 2007

தாயைத் தவறவிட்ட
குழந்தையின் கண்ணீரை
துடைத்துவிட்ட உன்
கைவிரலில் தவறவிட்டேன்
என்னை நான் உன்னிடம்
*

நீ நீயாக இருக்கும்
உன் பிடிவாதக்காகவே
நான் நானாக
இல்லாமல்
நீயாக மாறலாம்
*
உன் இமைகள்
சேரும் அழகிலே
இரவாகலாம் நான்
விடியாமல் போனாலும்
பரவாயில்லை
*

உன்னை மறந்து
என்னால்
உறங்க முடியவில்லை
உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு
கனவில் நன்றி
சொல்வேன்
*

நீ என் கவிதைகளுக்கு
வாசகியாக இருந்ததற்கு
பதிலாய்
நீயும் கவிதை
எழுதியிருக்கலாம்
நீயாக மாறியதில்
இருந்து வாசிப்பதை
மட்டுமே
விரும்புகிறேன் நான்
-யாழ்_அகத்தியன்
3 மறுமொழிகள் |
புதுமையானவளே..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 19, 2007

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்
கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
உன் வாசகன் நான்!!! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 15, 2007

கூட வந்துவிட்டு
விடைபெறுகிறாய்
வலிக்கத் தொடங்குகிறது
என் கால்களும் மனசும்
*
இதழ் பிரியாமல்
புன்னகை செய்துவிட்டு
கடந்து செல்கிறாய்
மலரத்
தொடங்குகிறேன் நான்
*
தனிமையில் என்னை நானே
சுமந்து கொண்டிக்கிறேன்
பிணமாக நான்
*
உனக்கு பிடித்த
எழுத்தாளன் நான்
என்னையும்
பேனாவையும்
எழுத வைத்தே சாகடித்துக்
கொண்டிருக்கிறாய் நீ
*
உன்னால் வாசிக்கப்
படுகின்றன என் கவிதைகள்
கலைய தொடங்குகின்றன
என் சோகங்கள்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
சோலையானவளே...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 10, 2007

உன்னோடு பேசி
சிரித்த நாட்கள்
உன் கைபிடித்து
திரிந்த நாட்கள்
ஏன்
உன்மடியில் எனை
மறந்து தூங்கிய
நேரங்கள்
இப்படியான என்
சந்தோசங்களை
எல்லாம்
காரமான சில வினாடி
பேச்சால் கரைத்துவிட்டாயே
பாவம் நான்
யாருமே எனக்கில்லை என்ற
உண்மையை எத்தனை பேரிடம்தான்
ஏமாந்து தெரிந்து கொள்வேன்.
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
யாரும் எனக்கில்லை...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 10, 2007

நீ ஒட்டிவிட்டு
எறிந்த
பொட்டு நான்
யார் யாரோ
கால்களால்
மிதிக்கப் படுகிறேன்
*
என்னை நீ ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்
எனை வீரனாய்
நினைக்காமல் நீ
விளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று
*
ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது
கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்
உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது
*
அன்று
உனக்கும் சேர்த்து சுவாசித்தேன்
இன்று
உன்னவருக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன்
*
நீ வாழ்ந்தவீடு _ நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு சென்றுவிட்டாய்
இனி நீ திரும்பிவர
நினைத்தால் தயவு செய்து
தனியாக வந்துவிடாதே
நீ இல்லாமல் சாய்ந்து கிடக்கும் நான்
உடைந்து விழுந்துவிடுவேன்
-யாழ் அகத்தியன்
4 மறுமொழிகள் |
நீ வாழ நான் பாடுவேன். |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 9, 2007

காதலை
கண்களில் வைத்து
உறங்கி விடாதீர்கள்
இதயத்தில் வைத்து
எப்போதும் இயங்க
வையுங்கள்
*
மலிவான பொருள் கூட
விலைமதிப்பற்ற பொருளாவது
காதலர்கள் பரிமாறும் பரிசுப்
பொருள்களில் மட்டும்தான்
*
உன்னைப் பார்த்து
காதல் வரக் கூடாது
உன் காதலைக் கேட்டு
காதல் வர வேண்டும்
*
குழந்தைகளுக்கு
புன்னகை
அழகென்றால்
காதலர்களுக்கு
குழந்தைத்தனமே
அழகு
*
ஒரு பூவால்
இருவரை மலரவைக்க
முடியும் என்றால்
காதலர்கள் கரம் சேரும்
பூக்களால் மட்டும்தான்
*
காதலை பொழிந்து
கொண்டேயிருங்கள்
காதலித்தவள்(ர்) உங்களை
காயவைத்துக் கொண்டே
இருந்தாலும்
*
எந்த இழப்பும்
சந்தோசத்தை
கொடுப்பதில்லை
காதலிப்பவர்களிடம்
உங்களை நீங்கள் இழந்து
கொண்டிருப்பதைப் போல்
*
காதல் ஒரு அழகான மதம்
அதில் மூட நம்பிக்கையே
வேதம்
*
மொழிகளை
அழகாக்கிக்
கொண்டிருப்பவை
காதல் கவிதைகள்
மட்டும்தான்
*
எதுவெல்லாம் உன்
உரிமைகள் என்பதை
தெரிந்து
கொள்வதற்காகவாவது
காதல் செய்.
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
காதல் செய்...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
டிசம்பர் 7, 2007

உன்னை நான்
ஆசைப்படுவதை
யாரிடமும்
சொல்லிவிடாதே
நான் கதைக்காமல்
விட்டவர்கள் எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்
*
உன் மேலான என்
ஆசையெல்லாம் ஒன்று
சேர்ந்து
என் ஆசையில் ஒன்றான
என் கோவத்தை உன்னிடம்
காட்டவேண்டும் என்பதை
நிராசையாக்கிவிட்டது
*
விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை
உன் விளையாட்டுத்தனம்
*
உன் வீட்டில் நீ
வாயாடியாம்
பொய்
சொல்கிறார்கள்
இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே
*
ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
உன் மேல் கோவிக்கும்
போதுதான் என் ஆசைகள்
எல்லாம் எழுந்து நிற்கின்றன
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
எனதானவளே...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.