என் நீயும் என் கவியும்

அக்டோபர் 28, 2009

கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்

கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்

*

என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை

*

என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது

-யாழ்_அகத்தியன்