காகிதத்தாள்

செப்டம்பர் 9, 2010

காகிதத்தாள்

என் மகன் கையில்
கிடைத்தால்
அவன் கிறுக்குகிறான்
அது அழகான
சித்திரமாகிவிடுகிறது

அத்தனையும்
பொக்கிசமாக்கப்படுகிறுது
என்னவளால்

என் பங்கிற்கு
நானும் கிறுக்குகிறேன்

அது இதுவரை
சித்திரமானதுமில்லை
கவிதையானதுமில்லை

கிறுக்கலாவதால்
என் கையாலே
கசக்கி எறியப்படுகிறது

-யாழ்_அகத்தியன்


காதல் கவி நீ…!

செப்டம்பர் 7, 2010
எனக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ

தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை

————————-

காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை

————————

நீ
நல்லவளே இல்லை

பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்

———————–

உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது

தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று

-யாழ்_அகத்தியன்

// <![CDATA[//


Follow

Get every new post delivered to your Inbox.