கற்றது காதலை…!

December 26, 2010

சேற்றில்
விழுந்தாலும்

காதலில்
விழுந்திடாதே

உன் வீட்டில்
எல்லோரும்

தலை முழுக
வேண்டிவரும்

*

 

நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட

உன் விடுதலை
அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்

நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது

*

 

உன் காதல்
குழந்தையை
கலைக்க

வைத்தியர்
தேவையில்லை

உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்

*

 

காதல் திரைப்படமா
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்

நான் காதலையே
வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்

-யாழ்_அகத்தியன்


காதல் கண்ணீர்

December 26, 2010

நீ
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்

என்னை
கொண்றிருந்தால்

என்
பிணத்தை

நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது

*

என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது

-யாழ்_அகத்தியன்


காதல் கவி நீ…*2*

December 5, 2010

பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால் 

அது கவிதை

கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.

*

குழந்தையும்
உன் அழகும்
ஒன்றுதான் 

ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.

*

எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான் 

உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறது

*

நீ
எழுதிய 

அழகான
கவிதை

கிறுக்கலானது

உன்
கையொப்பம்
கவிதையானதால்.

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.