
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்க மறந்து போன
காதல் நம்முடையது
*

அழகிய கவிதையே
என் பேனாவின் மையே
உன்னைக் கிறுக்கியே நான்
இறந்து கொண்டிருக்கிறேன் தினம் ஏக்கத்தில்
விழித்திருப்பேன்
பாதையெங்கும்
உன் விம்பம்தேடி
எங்கே நீயென தேடித் தேடியே
நித்தம் முத்ததில் நானிருப்பேன்
*

உனக்காக காத்திருந்து
என் உயிர் பிரியுமென்றால்
அதைவிட வேறன்ன
வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே
*

எத்தனை இரவை
என் விழி பகலாக்கியிருக்கும்
எல்லாம் அன்பே நிலா
உன்னை காணத்தானே என்று புரிவாய் எனை என
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா…..
*

காதலி எனைக் காதலி
உன் கரம் பிடிக்க கை
நீளுதே இதமான தென்றலை
என்றும் வீசுவேன்
என்னருகே நீயிருந்தால்
உன் மடியில் நான் தூங்க
*

எங்கே நீ சென்றாலும்
உன்னோடு ஓடிவரும்
நிழலாக நானிருப்பேன்
என்பதை நம்பிவிடு
*

ஆயிரம் சொன்னாலும் உலகம்
அன்பே உனை சேர அகிலமே
எதிர்த்தாலும் கோழையாய் நான்
முலையில் படுத்துறங்கமாட்டேன்
போராடியே போராளியாய்
உன் கை பிடிப்பேன் என்
உலகமே நீயாக வேண்டும்
என்பதே என் கொள்கை
*

எதிர்ப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டாம்
எனக்காய் நீயும்
ஓடி வரவேண்டாம்
விழுப்புண் அடைந்தாலும்
வேங்கை நான்
உன்னைக் கேக்க
வாசல் வருவேன் அதுவரை பொறுத்திரு
முடிந்தவரை சமாதானமாய் பேசிப்பார்ப்போம்
சிறந்த வீரனுக்கு
அழகு பொறுமையாம்
அழகு தேவதையே
உன்னால் வீரனானேன்
உனக்கென பொறுக்க
மாட்டேனோ…
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.