அமைதியானவளே..!

நவம்பர் 1, 2007

நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா

உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்

*

என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்

எப்படியும்
நீ வீடும் சென்று படிக்கும்
போது காமக்கவிதையாய்
மாறியிருக்கும்

*
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா

உன்னை
பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்

*

உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்

நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்

*

உனக்கு காதல்
கதையே தெரியாதா

நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே

-யாழ்_அகத்தியன்