காதலித்தால் இதயங்கள்
இடம் மாறுமாமே வா
இதயங்களை மாற்றிவிட்டு
காதலித்து பார்ப்போம்
*
நான்
வார்த்தை தேடி
அலைந்தபோது
வந்து கிடைத்த
கவிதை நீ
*
பயந்து பயந்துதான்
உன்னை என் அம்மாவுக்கு
அறிமுகப்படுத்தினேன்
அவா
உன்னை ஆலாத்தி எடுத்து
வரவேற்பா என்று தெரியாமல்
*
வறண்ட பூமியை
விட நீ வைத்திருக்கும்
குடைதான் மழைக்காக
தவிக்கிறது
*
உலகம் அழியும் நாளில்
நான் உயிரோடிருந்தால்
தற்கொலையாளியாய்
உன் மேல் பாய்ந்துதான்
என்னை அளித்துக் கொள்வேன்
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.