இனியவளே…
உன்னோடு பேசிவிட்டு
கனவு காண்கிறது
என் கைபேசி
நானோ
பேசிக்கொண்டேதானிருக்கிறேன்
இன்னும் உன்னோடு பேசுவதாய் நினைத்து
**************************************
பகலில் சந்தித்தால்
திரும்பி திரும்பி
பாக்கிறாய்
இரவில் சந்தித்தால்
என்னையே பாக்கிறாய்
அவ்வளவு மரியாதையா
உன் நிழல் மீது உனக்கு
**************************************
மது அருந்திவிட்டு
கார் ஓடக்கூடாதாமே
எங்கே உன்
கைக்குட்டையை கொடு
சந்தியில் பொலிஸ் நிக்கிறான்
என் உதட்டில் உன் எச்சிலைப்
பார்தால் பிடித்து விடுவான்
**************************************
என்
புத்தகத்தினுல்
உறங்கும் என்
பேனா போல்
உறங்கிகிறேன்
உனக்காய்
கவிதை
எழுதுவதாய்
கனவு கண்டபடி.
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.