இனியவளே…! [5]

மார்ச் 16, 2007

இனியவளே…

உன்னோடு பேசிவிட்டு
கனவு காண்கிறது
என் கைபேசி

நானோ
பேசிக்கொண்டேதானிருக்கிறேன்
இன்னும் உன்னோடு பேசுவதாய் நினைத்து

**************************************

பகலில் சந்தித்தால்
திரும்பி திரும்பி
பாக்கிறாய்

இரவில் சந்தித்தால்
என்னையே பாக்கிறாய்

அவ்வளவு மரியாதையா
உன் நிழல் மீது உனக்கு

**************************************

மது அருந்திவிட்டு
கார் ஓடக்கூடாதாமே
எங்கே உன்
கைக்குட்டையை கொடு

சந்தியில் பொலிஸ் நிக்கிறான்
என் உதட்டில் உன் எச்சிலைப்
பார்தால் பிடித்து விடுவான்

**************************************

என்
புத்தகத்தினுல்
உறங்கும் என்
பேனா போல்
உறங்கிகிறேன்

உனக்காய்
கவிதை
எழுதுவதாய்
கனவு கண்டபடி.

-யாழ்_அகத்தியன்