இமையானவளே…!

அக்டோபர் 7, 2007

user posted image

உன் வீட்டில்
யாருக்கும் கவிதை
பிடிக்காதா..?

பார்…
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று

*

நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

*

உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை

இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என் கவிதைபோல

*

நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா கனவிலாவாது
ஒன்றாவோம்

*

உன் இரு வரி உதடுகள்
ஒனறு சேர்ந்து பேசும்
மிக அழகான ஒரு சொல்
கவிதை “ம்”

-யாழ்_அகத்தியன்