இலக்கியமானவளே…!

மார்ச் 13, 2008

 

எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை

*

என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை

*

அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது

*

என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள்

என்றாலும் அவளால்
வாசிக்கப்படும்
கவிஞன் நான்

*

எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல

எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்

-யாழ்_அகத்தியன்