
நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்
*
நீ
எனக்குக் கொடுத்த தண்டனை
எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த
என்னைக் காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான்
*
நீ என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது
ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்
*
உன்னால் புகைக்கப்பட்ட
சிகரட் நான் என்றாலும்
உனக்கு முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்
*
என் வாழ்க்கை எனும் பேருந்தில்
இறங்கிப் போன மறக்க முடியாத
சாரதி நீ
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.