எனக்கானவளே…!

December 8, 2007

 

எல்லாருக்கும்
பிடிச்ச
கவிஞனாக நான்
 
எனக்குப்
பிடிச்ச
கவிதையாக நீ
 
*
 
எனை வாசிக்கத்
தொடங்குகிறாய்
 
என் பிழைகளை
 நீக்கத் தொடங்குகிறது
காதல்
 
*
 
 நிலாவாகிறாய் நீ
வானமாகிறது காதல்
 
வானமாகிறாய் நீ
தேய்பிறையாகிறேன் நான்
 
*
 
 நிலாவாய் வந்து
மறைகிறாய்
 
எனை காயவைக்க
உதிக்கிறது சூரியன்
 
*
 
தேயத் தேய
என்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் கவி நிலா நீ
 
 
-யாழ்_அகத்தியன்
 


Follow

Get every new post delivered to your Inbox.