என் உயிரானவளே

மார்ச் 24, 2007

என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய்
இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த
மறுக்கிறது என் காதலின் நினைவு

*

உன்னோடு வாழ்ந்த காலத்தைவிட
உன் நினைவுகளோடு வாழும்
காலம்தான் அதிகம் என்றபோதும்
என்னைக் கவலைப்பட விட்டதில்லை
உன் ஞாபகங்கள்

*

எரிக்க மனமின்றித்தான் எரித்தேன்
உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக

*

என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு
பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன்.

*

உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை
யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்
உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ
தேடிப் பார்க்கிறேன்

*

தயவு செய்து என் பெயரை
உன் பிள்ளைக்கு வைத்து விடாதே
நீ உயிரோடு இருக்கும் போதே
அனாதையாகிவிடும்

*

என் ஆயுளின் அந்தியிலாவது உன்னைச் சந்திக்க
நேர்ந்தால் உன்னிடம் சொல்லச் சுமக்க வார்த்தை
இதுதான் உன்னை நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.