என் உயிர் காதலியே..!

நவம்பர் 12, 2007

 

இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்
 
இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடித் திரியும்
பொழுதுகளில்

இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.