என் கையில் உன் பேனா

மார்ச் 22, 2007

உன்னைத் சந்தித்து
சில மாதமே ஆனபோதும்
எப்படியானேன் உன்னவளாய்

இன்றுவரை உன்னை நேரில் சந்தித்ததே
இல்லையே எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய் எதற்காய்
உன் வசமானேன் எதுவும் புரியாதவளாய்

இதுவரை தூக்கம் வராமல் என் விழிகள்
துடித்ததே இல்லையடா ஏன் தான் இன்று
உன் பெயரை கோடி முறை உச்சரிக்கும் வரை
தூங்க விடுவதில்லை உன் நினைவு

உன்னை பொறுக்கி என்று கூட திட்ட
துணிந்தவள் நான்_ ஏன் தான் உன்னை
நீயே திட்டினால் கூட என் மனம்
பொறுப்பதில்லை

காதலை மதித்த போதும் நான்
காதலிக்க துணியாத கோழையாய்த்
தானிருந்தேன் எப்படி என்னை வாழ்ந்தால்
உன்னோடு என சொல்ல வைத்தாய் _சொல்
என்னவனே சொல்

என் கிறுக்கல்கள் என்றாலே கை தட்ட
பலர் இருந்த போதும்_என் கண்கள்
உன் கவிதைக்காகவே தினம் விடியவைக்கும்

என்னவனே நான் கிறுக்கி எறிந்த
காகிதத்தில்தானே இன்னும் கசங்கிக்கிடக்கிறது
நான் சொல்லத் துடிக்கும் என் காதல்


என்மேல் எனக்கே இல்லாத அக்கறையை
உன் மேல் கொண்டேன் அதனால்த்தானோ
கனவைக்கூட தினம் விழித்திரிந்து

காண்கிறேன்


உன் விழிபார்க்கும் தூரத்தில் நானில்லாதபோதும்
உன்னைக் காக்க எங்கோ ஓர் மூலையில் உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்


-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.