உன்னைத் சந்தித்து
சில மாதமே ஆனபோதும்
எப்படியானேன் உன்னவளாய்
இன்றுவரை உன்னை நேரில் சந்தித்ததே
இல்லையே எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய் எதற்காய்
உன் வசமானேன் எதுவும் புரியாதவளாய்
இதுவரை தூக்கம் வராமல் என் விழிகள்
துடித்ததே இல்லையடா ஏன் தான் இன்று
உன் பெயரை கோடி முறை உச்சரிக்கும் வரை
தூங்க விடுவதில்லை உன் நினைவு
உன்னை பொறுக்கி என்று கூட திட்ட
துணிந்தவள் நான்_ ஏன் தான் உன்னை
நீயே திட்டினால் கூட என் மனம்
பொறுப்பதில்லை
காதலை மதித்த போதும் நான்
காதலிக்க துணியாத கோழையாய்த்
தானிருந்தேன் எப்படி என்னை வாழ்ந்தால்
உன்னோடு என சொல்ல வைத்தாய் _சொல்
என்னவனே சொல்
என் கிறுக்கல்கள் என்றாலே கை தட்ட
பலர் இருந்த போதும்_என் கண்கள்
உன் கவிதைக்காகவே தினம் விடியவைக்கும்
என்னவனே நான் கிறுக்கி எறிந்த
காகிதத்தில்தானே இன்னும் கசங்கிக்கிடக்கிறது
நான் சொல்லத் துடிக்கும் என் காதல்
என்மேல் எனக்கே இல்லாத அக்கறையை
உன் மேல் கொண்டேன் அதனால்த்தானோ
கனவைக்கூட தினம் விழித்திரிந்து
காண்கிறேன்
உன் விழிபார்க்கும் தூரத்தில் நானில்லாதபோதும்
உன்னைக் காக்க எங்கோ ஓர் மூலையில் உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.