மொழி தெரியா வயதில்
கண்களில் இதமாய்
தினம் நீ திரையானபோதும்
உனை நான் உணரவில்லை…
தலையணையின் துணையோடு
தனியாய் நான் தூங்கியபோதும்
வானவில்லாய் நீ வந்து
போனபோதும் உனை நான்
உணரவில்லை……
கறுப்பு வெள்ளையாய் என்
வாழ்வு ஆனபோதும் பல
வர்ணங்களாய் நீ வந்த
போதும் உனை நான்
உணரவில்லை….
நூற்றுக்கணக்காய் நான் கவி
எழுதிய போதும் என் பெயரே
பிடித்த கவிதை என்று அழகாய்
கண்களில் முத்தமிட்ட தேவதையை
கனவே நீ…..
காட்டிக் கொடுத்தபோதுதான்
உணர்ந்தேன் உன் சேவையையும்
என் பெயரின் இனிமையையும்
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.