கவிதையே தெரியுமா..?

செப்டம்பர் 18, 2007

தலைப்பின்றி
ஒரு கவிதை
அவள் பெயர்

*

வார்த்தைகள் வற்றிவிட்டது
கலந்து பேச வரச் சொல்லுங்கள்
என்னை ஏமாற்றியவளை
ஆணையிட்டான் கவிஞன்

*

காதலியின் பெயரை
வைக்க சம்மதித்தாள்
என்னால் தாயான
மனசை புரிந்த மனைவி

*

தாரம் தாயானதில்
புரிந்து கொண்டேன் ஏன்
தாரத்துக்கு முன் தாய்
என்பதை

*

இருந்த இடத்தில்
இருந்து உலகம் சுற்றுகிறாள்
என் கவிதையில் அவள்

*

கவிஞனின்
கல்யாணவீட்டில்
கவலைப்பட்டாள்
கவிஞனாக்கியவள்

*

கவனமாக இருக்கிறான்
காதலிக்கு கவிதை எழுதுபவன்
ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது
என்பதில்

*

காதலிக்கே மிஞ்சவில்லை
எப்படித் தானம் செய்வேன்
என் கவிதைகளை
அன்னைக்கு சொன்னான்
கவிமகன்

*

உனக்கு பிடிக்காத
என் கவி(குழ ந்)தைகளை
நீயே போட்டுவிட்டு போ
குப்பைத் தொட்டிக்குள்

*

சுமக்க முடியாமல்
கவிக் கருவை
கலைக்கப் போனவன்
கவலையோடு
திருப்பி வந்தான்
தாமதம் என்ற
கவிதையோடு

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.