கவியானவளே… [05]

மே 5, 2007

உன் கண்களில் மிதக்க
ஆசைபட்டு மூழ்கிப்போனது
யார் யாரோ கண்களில்
என் கவிதைகள்

 என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான்
தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக்
கொடுக்கும் என் கண்களை யார் என்பேன்

 

நீ அழகாய் கிழித்தெறிவதை
ரசிப்பதற்காகவே அழகான
கவிதைகளாய் எழுதிக்
கொண்டுவருகிறேன்

 சாண் ஏற முழம் சறுக்கிறது
உன் வீட்டு வாசல்படி எனக்கு

என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல்
போனது நீ என்னை மறந்ததை நான்
இன்னும் நம்பவில்லை

 

அவளைச் சிரிக்கவைத்து
அழாமல் எடுத்துக் கொடுத்தேன்
என் செத்தவீட்டு புகைபடக்காரனாய்
அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை

உன் வீட்டுச் சுவரில்
எனக்கு யாரோ எழுதிய
இரங்கல் கவிதை இன்னும்
இறக்காமல் வாழ்கிறது
நீ வாசிக்க மறந்ததால்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.