கவியானவளே… [01]

April 24, 2007

என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்

*

கிடைத்தது எல்லாம்
பெரிதாகவே தெரிந்தது நீ
கிடைக்காமல் போகும் வரை

*
உன் நினைவுகளுக்கு
ஆடை மாற்ற வேண்டும்
கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா

*

நீ வேண்டும் என்பது என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும் என்பது என் புதுக் கவிதை

*

நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.