கவியானவளே…[12]

செப்டம்பர் 3, 2007

உன் பார்வையில்பார்த்துக் கொண்டேன்
என் கண் காட்சியை

*

உன்னை சுற்றியதில் சேலைக்கு
கிடைத்தது
அழகான தேவதை

*

தேடிப் பார்க்க தொடங்கினேன்
எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு
உனக்குள் இருக்கும் என்னை

*

உன்னை பார்த்த களைப்பில்
ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்

*

முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான் உன்
உதட்டில் ஒரு மச்சம்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.