நீ சிரிக்க மறந்த உன் புகைப்படம் மீது
ஒரு கவிதை எழுதினேன் என்ன அதிசயம்
உன் கன்னக் குழிக்குள்ளே காணாமல் போனது
என் கவிதை
*
தினம் ஒரு கவி எழுதி
உன்னைத் தேட விட்டேன்
எல்லாமே களைப்பில் உன்
ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது
*
மது போதையிலும் எழுதி முடித்தேன்
உன் பெயரை தலைகிழாக
என் கவிதையாய்
*
என் கவிதைகள் எல்லாமே எழுதிய என்னை
விசாரிக்க வைப்பதைவிட உன்னைத்தான்
அதிகம் விசாரிக்க வைக்கிறது
*
எனக்கு பிறக்கும் கவிதைகள் எல்லாத்தையும்
நீ வாழவைக்க ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு கூட்டிச்செல்
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.