காதலர்தின கிறுக்கல்கள்

மார்ச் 16, 2007

நீ பேசாமல் நின்றாலும்
பேசிக்கொண்டேதானே இருக்கிறது
இன்னும் என்னோடு உன் கண்கள்

இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க நாம்
நல்ல நண்பர்கள் என்று

உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான் கொடுக்கும்
போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?

நல்ல காலம் உன் கண் பேசும்
வார்த்தைகள் யாருக்கும் புரிவதில்லை
இல்லையேல் திட்டும் போதும் நான்
சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்

உனக்கான கவி நடையில்தான்
என் எழுத்துக்கள் இடையில்
கிறுக்கல் ஆகிறது

தயவு செய்து கோவத்தோடு
எனை விட்டு பிரியாதே
என் கோவத்தை யாரிடமாவது
காட்ட வேண்டி வந்துவிடும்

நம் முதல் சந்திப்பில்
காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்
காதல் வந்தது

இன்று காதலர்தினமாம்
யாரையாவது காதலிக்க விடுகிறாயா
நேற்றே வந்து விட்டாய்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.