தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன்
இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள்
என் காதலை
நான் பேசிக்கொண்டே இருக்க உன்
கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும்
நான் பேசாமல் இருக்க உன்னிடம்
கற்றுகொள்ள வேண்டும்
நீ காட்டும் யார் என்றாலும்
சண்டை பிடிக்க தயார்
உன் கண்களை காட்டத வரை
உன்னை சிரிக்கவைத்து
பாக்க ஆசைதான் இன்னும்
முழுசாய் பாக்க விட்டதில்லை
உன் கன்னக்குழி
நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன்
இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல்
போய்விடுவாயோ என்று
உன்னை ஒருதலையாக காதலிப்பது
முட்டாள்தனமாக இருந்தாலும்
உன்னைக் காதலிக்கிறேன் என்பதே
என் ஆயுளின் கெட்டித்தனம்
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.