காதலே போ…

செப்டம்பர் 22, 2007

உன்னால் கவிஞன்
ஆனதிலிருந்து

உனக்காக எழுதி எழுதி என்
அயுளைக் குறைத்துக் கொண்டத்துதான்
மிச்சம்

நீ
என்னை புரிந்து கொண்டதுமில்லை
இனியும் புரிந்து கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை

நீ
என்னை வாசித்ததில்தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்
இப்போதுதான் புரிகிறது
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக்
கொண்டேயிருக்க
என்
அயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது

தண்ணீர் கூட மூன்று
தடவைக்குமேல்
பொறுக்காது

நான்
எத்தனை ஆண்டுகள்
பொறுப்பது

நீ
என்னை புரிந்து
கொண்டு வருவாய்
என்று

போதும் இதுவரை
உனக்காக கவிதையோடு
நான் காத்திருந்தது

நான் ஒன்றும் உன்
பாலர் ஆசிரியர் அல்ல
நீ எதை எறிந்தலும்
நீ எதை செய்தாலும்
அதை பொறுத்துக் கொண்டு
கற்றுக் கொடுக்க

காணும் இதுவரை
என் கவிதைகளால்
நீ அழகானதும்
நீ சந்தோசப்பட்டதும்
என்னை ஒரு கிறுக்கன்
என்று நினைத்து நீ
சிரித்ததும்.

ம்ம்..
என்ன சிரிக்கிறாயா?
சிரி செல்லம் சிரி
ஆசை தீர சிரி

இதுதான் நீ என்னை
நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு

ஏன் தெரியுமா?
நன்றிக்கடனுக்காய்
இதுவரை உனக்கு மட்டுமே
கவிஞனாக இருந்த நான்

இன்றுமுதல்
இந்த உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க போகிறேன்.

என்ன கவலைப் படுகிறாயா?
கவலைப் படாதே இனி உனக்காக
என் பேனா தலைகுனியாது
இது உறுதி.

என் கவிதையில்
உன்னை அழகாய்
உக்கார வைத்த நானே

உனக்கு அர்த்தங்கள்
புரியாததால் இந்த
கவிதையோடு

உன்னை
மறந்துவிடுகிறேன்
என்னை
மன்னித்துவிடு

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.