காதலே வருவாயா

மார்ச் 19, 2007

காதலே வருவாயா

மார்ச் 16, 2007

உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்

உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான்
விரும்பவில்லை

கவிதைக்காய்
காத்திருப்பதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்

உனக்காய் காத்திருந்து என்
எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே

என்னைக் காக்க வைத்து விட்டு
வரும் போது கவனம் நீந்த நேரிடலாம்
என் கவிதையின் கண்ணீரில்

இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்

காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்

கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய் என்று
பொய் சொல்லுகிறேனோ

உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.