எனக்குள் அவளை
புதைத்து வைத்தாள்!
என்னை எனக்குள்
தேட வைத்தாள்!
விதியிடம் மதியை
கெஞ்ச வைத்தாள்!
தெய்வத்தால் என்னை
தேட விட்டாள்!
அடி வாங்காத என்னிதயத்தை
இடி தாங்க வைத்தாள்!
விழியை மூட வைத்து
மொழிக்குள் என்னை விட்டு
வார்த்தைகளைத் தேட வைத்தாள்!
படிக்காத என்னைக் கொண்டு
படிக்காத வார்த்தைகளால்
கவி வடிக்க வைத்தாள்!
என்னைக் கவிஞனாக்கி விட்டு
கணவன் வீட்டுக்குப் போனவளே!
காத்திருக்கும் என் கவிதைகள்
காலமெல்லாம் உன் கண்களுக்காய்…
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.