சிலையானவளே…

செப்டம்பர் 12, 2007

நீ கொடுத்த முத்தத்தால்
மொய்த்துக் கொள்கின்றன
என்னைச் சுற்றி தேனீக்கள்

*

அழகைப் பற்றி
எழுதச் சொன்னார்கள்

நான் உன்னைப் பற்றி
எழுதினேன்

உன்னைப் பற்றி
எழுதச் சொன்னார்கள்

நான் கவிதையைப் பற்றி
எழுதினேன்

*

உன்னைப் பார்த்து
எழுதிய கவிதைகள்தான்
என் சொந்தக் கவிதைகள்

*

நிலவின் கையால்
சாப்பிட்டபின்
நிலாச்சோறு
பிடிக்கவில்லை

*

எழுந்தாலும்
விழச் சொல்லும்
உன் கன்னக்குழி

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.