செல்லமானவளே..!

ஜனவரி 2, 2008

எல்லோருக்கும்
தை பிறந்தால்தான்
வழி பிறக்கும்

எனக்கு மட்டும் எப்போதும்
தைதான் என் வழியே நீ
என்பதால்

*

வந்துபோகும் நாட்கள் போல்
வந்து போகிறது நீ என்னோடு
இருக்கும் ஒவ்வொரு வருசங்களும்

*

நம் கல்யாண வருசத்துக்காகவே
என் காதல் வருசங்கள் ஒவ்வொன்றும்
நாட்களை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது

*

நான் எழுதாத
கவிதை நீ என்பதிலும்
எனக்கு மகிழ்சியே

ஏனெனில்
என் கவிதைகள்தான்
யார் யாரோ பெயர்களில்
உலகம் சுற்றுகிறதே
*

வருசத்தில் முதல் நாளில்
மட்டும் வாழ்த்த ஆயிரம்
உறவுகள்

வாழ் நாள் முழுவதும்
என்னை வாழவைக்க நீ

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.