தமிழுக்கு நான் ஏழை…!

நவம்பர் 19, 2009
தமிழுக்கு நான் ஏழை…!

  

எனக்குத் தெரியாத
தமிழ்மீதான என் கோபம்
இன்னும் குறையவில்லை
 

 

ஏனெனில்
எப்பொழுதெல்லாம்
அதை தெரிந்த
கொள்ள் நினைக்கிறேனோ
 

 

அப்பொழுதெல்லாம்
தனி அறைகளில்
சில
கவியரசுகளிடம் மட்டும்
மனம்விட்டு
பேசிக் கொண்டிருக்கும்

 

  தமிழே நீயும்
வசதியானவர்களின்
வர்க்கம்தான்
 

 

அதனால்தான்
என்னைப் போண்ற
ஏழைக் கிறுக்கன்களை

  

உன் கண்களுக்கு
தெரிவதே இல்லை
 

  

-யாழ்_அகத்தியன்

 

 

 


Follow

Get every new post delivered to your Inbox.