தரிசனமானவளே…

செப்டம்பர் 22, 2007

 

உன்
அமைதியான
வேண்டுதலால்
பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி

*

நீ
சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு பிடித்தது
தேவதை தோசம்

*

நீ
முருகனைச்
சுற்றுகையில்

முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்

*

அழகானவள்
கிடைக்க வேண்டும்
என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்

உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க வேண்டும்
என்கிறார்கள்

*

கடைசியில்
எனக்கும் சந்தேகம்
வந்துவிட்டது

பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா?
கோயிலைச் சுற்றுகிறார்களா?

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.