நான் கிறுக்கன்தான்…!

அக்டோபர் 9, 2007

என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
அவையாவும் கற்பனைகள்
என்பதால்

.

என் கவிதைகளில் எழுத்துப்
பிழைகள் அதிகம் இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
மன்னித்துவிடு
நான் உன்னைப்போல்
படித்தமேதையல்ல

.

என் கவிதைகளில் தலைப்புகள்
பொருத்தமற்றதாக இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
உண்மைதான் நான் எழுத நினைப்பது
ஒன்று எழுதி முடிப்பது வேறொன்று
எல்லாம் உன்னை காயப்படுத்தக் கூடாது
என்பதால்தான்

.

என் கவிதைகள் எதுவுமே நீ வாழ்த்த
தகுதியற்றனவாக இருக்கலாம்

இதையும் ஏற்றுக்கொள்கிறேன்
உன்னால் கிறுக்கனானேன் என்பதால்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.