
என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன்
அவையாவும் கற்பனைகள்
என்பதால்
.
என் கவிதைகளில் எழுத்துப்
பிழைகள் அதிகம் இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன்
மன்னித்துவிடு
நான் உன்னைப்போல்
படித்தமேதையல்ல
.
என் கவிதைகளில் தலைப்புகள்
பொருத்தமற்றதாக இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன்
உண்மைதான் நான் எழுத நினைப்பது
ஒன்று எழுதி முடிப்பது வேறொன்று
எல்லாம் உன்னை காயப்படுத்தக் கூடாது
என்பதால்தான்
.
என் கவிதைகள் எதுவுமே நீ வாழ்த்த
தகுதியற்றனவாக இருக்கலாம்
இதையும் ஏற்றுக்கொள்கிறேன்
உன்னால் கிறுக்கனானேன் என்பதால்
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.