நான் படித்தவனல்ல…!

அக்டோபர் 10, 2007

 user posted image

நான் படித்தவனல்ல
படிபிக்கப்பட்டவன்
அனுபவங்களால்.

உங்க ஊர்
பள்ளியில்தான்
நீங்கள் பட்டம்
பெற்று இருப்பீர்கள்
நான் ஏடு துவக்கியதுதான்
சொந்த ஊர் பள்ளியில்
ஆரம்ப கல்வி படித்ததே
மூன்று பாடசாலையில்.

யுத்தம் என்பதை நீங்கள்
பாடத்தில் படித்திருப்பீர்கள்
அனால் நான் யுத்தத்துக்குள்
பள்ளி சென்றவன்.

குடை இல்லை என்பதற்காக
பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள்
நான் குண்டு மழைக்குள்ளும்
பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன்.

நீங்கள் காகிதத்தில் செய்த
ரொக்கேற்றுகளைத்தான்
வகுப்பறையில் பறக்கவிட்டு
இருப்பீர்கள்
நான் குண்டு விமானங்கள்
சுற்ற சுற்ற படித்திருக்கிறேன்.

நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
என்னைப்போல் அயுத வெடிசத்தத்தில்
உயிர்மெய் எழுத்தை படித்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
அழகான பாதணிகளோடு பள்ளி
சென்று இருப்பீர்கள்
என்னைப்போல் கண்ணிவெடியில்
கால் இழந்தபின்னும் சென்று இருக்க
மாட்டீர்கள்.

இவையெல்லாம் என் பெருமையாக
தெரியலாம் இவையால்த்தான்
தொடர்ந்து படிக்காமல் போனேன்
என்பது யாருக்கு தெரியும்……?

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.