காதலைவிட
காதலர்களே
உனை அதிகமாய்
நினைவு படுத்துகிறார்கள்*
நீ
வாசிக்கிறாயோ
இல்லையோ உன்னால்
பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை
*
நீ
அறிவாளிதான்
எழுத்துப் பிழைவிட்ட
என் கவிதைகளை கண்டும்
சுட்டிக் காட்டாமல்
வாசிக்கிறாயே
*
எனக்கு கிடைக்காமப்
போன அழகான பரிசு நீ
உன்னால் கிடைத்த அசிங்கமான
பரிசு என் பேனா
*
உனக்காக எழுதிய
கவிதைகளை
மறந்துவிட்டேன்
உன்னால் எழுதிய
கவிதைகளைத்தான்
ஞாபகம் வைத்திருக்கிறேன்
தயவு செய்து
நான் மறந்ததையாவது
வந்து ஞாபகப்படுத்திவிட்டுப்
போ..
மறுபடியும் நான்
காதலனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.