நீயே சொல்…

மே 1, 2007

என் காதலை விமானமாக்கி
அனுப்பிவைத்தேன் கொஞ்ச
நேரத்திலேயே தொலைத்தொடர்பை
இழந்துவிட்டது

என்ன செய்வேன் நான்

என்ன நடந்தது என்று
கேள்விகளை தொடுக்கிறது
உன் மேலான என் ஆசைகள்

என்ன சொல்லி சமாளிப்பேன்

நீயே சுட்டெரித்துவிட்டாய் என்று
உண்மை சொல்வேனா? இல்லை
எழுத்துபிழை காரணமாக காட்டுக்குள்
விழுந்துவிட்டது என்று பொய் சொல்வேனா?

நீயே சொல்….

எத்தனை மட்டும்தான் நான்
பொய்களை மட்டும் நம்பவைப்பேன்
என் ஆசைகள் வயதுக்கு வரும்வரையா?


-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.