பிரியாத ப்ரியம்!

மார்ச் 19, 2007

உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா?

என்னை மறந்து வாழத்தான்
இடம்பெயர்ந்தாய் என் நினைவுகளை
மறந்து வாழ என்ன செய்தாய்…

என் கண்ணைத்தான் அதிகம்பிடிக்கு மென்றாய்
உண்மைதான் அதை மட்டும்தான் என்னால
அடக்க முடியவில்லை

என்னை உண்மையாக காதலித்தாய்
என்றால் என்னை மறந்துவிடு என்றாய்
அப்போதுதான் பொய்யானது என் காதல்

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்

என்னை எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்குமட்டும்
என்னை

என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும்
எழுதியதில்லை எழுதும் கவிதை எல்லாமே
என்னை நீ மறக்காமல் இருந்தால் மறக்க
வைக்கத்தான்

இப்பொழுது எல்லாம் உன்னை
நினைக்காத போதும் கண்ணீர்வருகிறது
நீதான் என் கண்ணில்படாமல் வாழ்கிறாயே

என்னை ஞாபகப்படுத்தும் எந்தபொருளையாவது
காண நேர்ந்தால் தயவுசெய்து அனாதையாய்
விட்டுவிடாதே ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு கோடி புண்ணியம் கிடைக்கும்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.