பூவானவளே..

செப்டம்பர் 19, 2007

முத்தபூமி7

 

உனக்கு சந்தேகம்
அதிகம்தான்
இல்லையென்றால்
எதற்காக உன்னோடு
நட்சத்திரங்களையும்
கூட்டிப் போகிறாய்

*

என் இதயக்
கரும்பலகையில்
உன் பெயரே நிலவு

*

உன் இதழைத் தொட்டுக்
கொடுப்பதால்தான்
கேட்டு வாங்குகிறாய்
என் முத்தங்களை

*

முத்தக் கவிதைக்காய்
என் காது மடலையும்
விட்டு வைக்கவில்லை
உன் இதழ்கள்

*

அம்மா எவ்வளவுதான்
சுற்றிப் போட்டாலும்
உன் கண்படும் இடத்தில்
எப்போதும் நான்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.