மனமானவளே..!

மார்ச் 3, 2008

 

உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்

*

உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு

*

காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்

அந்தத்தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்

*

என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது

எனக்கான கவிதை நீ என்பதின்
பெருமை எனக்குரியது
 

*

நான் உறங்கா  நேரத்தில்
என் விழியாய் நீ

நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும் விழியாய் நான்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.