மன்னவனே..!

ஜனவரி 8, 2008

காதலனே
எனக்கு எதுவும்
வாங்கிவராதே

முடிந்தால் உன்னை
யார்
கண்ணும் படாமால்
கூட்டிவா

அதுவே போதும் நான்
கவலையின்றி கண்
உறங்க

*

உனக்காக
பிறந்தவள் நான்
என்றதில்

குழந்தையாய் நான்
மகிழ்ந்ததை விட

உன் கவிதையின் கரு
 நான் என்பதிலேயே

தாயாய் நான்
அதிகமாய் மகிழ்ந்தேன்

*
பாவம் என் கன்னங்கள்
 நீ ஆசையாய் கொடுக்கும்

ஒவ்வொரு முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க
தெரியாமல்

தடவி பறிக்கும் என் கை
விரல்களிடம் கொடுத்து
ஏமாந்துவிடுகிறது

*

இப்படி என் வீட்டவர
பயப்பிடுவாய் என்று
தெரிந்திருந்தால்

உன் புகைபடத்தை
என் அறையெங்கும் ஒட்டி
வைத்து

என் கோழைத்தனத்தை
வெளியே
அனுப்பியிருக்க மாட்டேன்

*

வெக்கம் கேட்ட
கவிஞன் நீ

என் வெக்கங்களை
கவிதையாக்கியே

என்னை வெக்கப்பட
மட்டும்
வைத்துவிட்டாய்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.