யாரும் எனக்கில்லை…!

December 10, 2007

 

உன்னோடு பேசி
சிரித்த நாட்கள்

உன் கைபிடித்து
திரிந்த நாட்கள்

ஏன்
உன்மடியில் எனை
மறந்து தூங்கிய
நேரங்கள்

இப்படியான என்
சந்தோசங்களை
எல்லாம்

காரமான சில வினாடி
பேச்சால் கரைத்துவிட்டாயே

பாவம் நான்
யாருமே எனக்கில்லை என்ற
உண்மையை எத்தனை பேரிடம்தான்
ஏமாந்து தெரிந்து கொள்வேன்.

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.