யார் குற்றமோ…!

அக்டோபர் 26, 2007

 

 

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நீ என்னை
காதலோடு
பார்க்காமல்
போயிருந்தால்

நான்
உன்னிடம்
நேரம் கேக்காமல்
போயிருந்தால்

இப்பிடி சேர்ந்து
ஒன்றுக்குள் ஒன்றாக
வாழ்ந்துவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.