வரமானவளே…!

மார்ச் 11, 2008

 

என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்

*

உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல

உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்

*

 நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு

*

ஆயிரம்
கவிதை எழுதிக்
 கிறுக்கனானேன்

உன் பெயர் எழுதி
கவிஞனானேன்

*

உனக்கான கவிதை என்று
தெரிந்தும்

எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே

எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.